தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் அனைத்து பள்ளிகளுக்கு பிளஸ் 2 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் வரும் மே 6 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், பி.இ, பி.டெக், பி.ஆர்க் போன்ற படிப்புகளுக்கு விருப்பமுள்ள மாணவர்கள் நாளை (மே 5ஆம் தேதி) முதல் ஜூன் 6ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் ஆகியவற்றிலும் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பிக்கும் முறை https://www.tneaonline.org அல்லது https://www.tndte.gov.in என்ற இணையத்தளத்தில் சென்று விண்ணப்பித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.