தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் உங்களில் ஒருவன் என்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் மக்கள் மனதில் உள்ள கேள்விகளுக்கு தமிழக முதல்வர் பதில் அளித்து வந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் நோக்கி பல அரசியல் ரீதியாக கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் குறிப்பாக அதிமுகவின் ஊழல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு, முதல் ஸ்டாலின் அவர்கள் கூறியது, கடந்த அதிமுக ஆட்சி ஊழல் நிறைந்தது என்று மக்களுக்கு நன்றாக தெரியும். இந்த ஊழலை சிஏஜி என்ற அறிக்கையும் உறுதிபடுத்தி உள்ளது. மேலும், இந்த ஊழல் தடுப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட சில திருத்தங்களின் அடிப்படையில் சில முன் அனுமதி பெற வேண்டியுள்ளதால் தான் திமுக ஆட்சியாளர்கள் மீதான ஊழல் வழக்குகள் அனைத்தும் தற்போது நீதிமன்றம் எடுத்துச் செல்லப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உறுதியளித்துள்ளார்.