தமிழகத்தை பொறுத்தவரை அரசுக்கு அதிக வருவாய் ஈட்டுவது டாஸ்மாக் ஆகும். இந்நிலையில் கடந்த 2022-2023 அம ஆண்டில் கிட்டத்தட்ட 44 ஆயிரத்து 98 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனை நடந்துள்ளது என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கொள்கை விளக்கக்குறிப்பில் தெரிவித்துள்ளனர். மேலும், இது குறித்து சட்டப்பேரவையில் விளக்கினார் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி. இதன் காரணமாக தமிழகத்தில் சில வருவாய் ஈட்டாத மதுபான கடைகள் இருப்பதாக கூறி சுமார் 500 கடைகள் மூடப்படுவதாக சட்டப்பேரவையில் அறிவிதித்திருந்தனர்.
அந்த வகையில், இன்று தமிழகம் முழுவதும் இந்த 500 டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டி கணக்கெடுக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த கணக்கெடுக்கும் பணியில் பார்க்கப்படுவது 50 மீட்டர்களுக்குள் டாஸ்மாக் கடை இருக்க வேண்டும் என்றும், வருவாய் குறைவாக இருந்தால் போன்ற காரணிகளை தேர்வு செய்து அந்த கடைகளை மூடப்படும் என கூறுகின்றனர்.