ஆற்காடு சாலையில் வடபழனியில் பிப்ரவரி 3 முதல் 11ம் தேதி வரை 10 நாட்களுக்கு சிஎம்ஆர்எல் பணியையொட்டி பெருநகர சென்னை போக்குவரத்துக் காவல் துறையினர் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளனர்.
ஆற்காடு சாலையில் இருந்து வரும் வாகனங்கள் சைதாப்பேட்டை சாலை (வடபழனி ஆர்ச் அருகில்) வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படவில்லை. சைதாப்பேட்டை சாலையை நோக்கி செல்லும் வாகனங்கள் துரைசாமி சாலை, சன்னதி சாலை மற்றும் 2வது அவென்யூ வழியாக தங்களின் இலக்கை அடையலாம். துரைசாமி சாலையில் இருந்து சன்னதி தெருவை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.
சன்னதி தெருவில் இருந்து வரும் வாகனங்கள் வலப்புறம் அல்லது இடதுபுறம் திரும்பினால் அவர்கள் இலக்கை அடையலாம். புதிய போக்குவரத்து ஏற்பாடுகளால், சைதாப்பேட்டை சாலையில் இருந்து முத்தாலம்மன் ரோடு வரை செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. 100 அடி சர்வீஸ் சாலையில் செல்லும் வாகனங்கள், முத்தாலம்மன் சாலை மற்றும் சைதாப்பேட்டை சாலை வழியாக தங்கள் இலக்கை அடையலாம்.