- Advertisement -
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில நாட்களாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக இன்று காலை முதல் கனமழை பெய்து வரும் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -