- Advertisement -
மாண்டூஸ் புயல் காரணமாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அந்தமான் கடற்கரை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவான இந்த புயல், மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்தது. சென்னைக்கு தென்கிழக்கே 200 கிலோமீட்டர் தொலைவில் மாண்டூஸ் உள்ளது.
புயல் இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே கடக்கும்.
- Advertisement -