மத்திய அரசு அலுவலகங்களில் 208 பேருக்கு பணி நியமன ஆணைகளை மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
முன்னதாக, அரசாங்கத்தின் ‘ரோஸ்கர் மேளா’ (வேலைவாய்ப்பு கண்காட்சி) ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் சுமார் 71,000 பணி நியமனக் கடிதங்களை விநியோகிப்பார் என்றும் அவர்களுடன் உரையாற்றுவார் என்றும் அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
இளைஞர்களுக்கு அரசுத் துறையில் வேலைவாய்ப்பு அளிக்கும், பாரத பிரதமர் திரு.@narendramodi ஜி அவர்களின் #RozgarMela இரண்டாம் கட்டத்தில் பணியமர்த்தப்பட்ட 71,000 பேருக்கு நியமனக் கடிதங்களை அளிக்கும் காணொலி நிகழ்ச்சியில் சென்னை ஆவடி CRPF மையத்தில் பங்கேற்று பணியாணைகளை வழங்கினேன். pic.twitter.com/6QkSDUwxlX
— Dr.L.Murugan (@Murugan_MoS) November 22, 2022
விழாவில், அஞ்சல் துறை, மருத்துவத் துறை, வங்கி பி.எஸ்.எப்., போன்ற துறைகளைச் சேர்ந்த 208 பேருக்கு பணி நியமன ஆணைகளை முருகன் வழங்கினார்.