Friday, April 26, 2024 9:20 am

பள்ளிகளுக்கு அருகில் கஞ்சா விற்பனை: ஐவரை அமிஞ்சிக்கரை போலீசார் கைது செய்தனர்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பள்ளிகளுக்கு அருகில் கஞ்சா விற்பனை செய்த 5 பேரை அமிஞ்சிக்கரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்து அவர்களிடம் இருந்து 3.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

ஒரு சம்பவத்தில், ஷெனாய் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கு அருகில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

தனிப்படையினர் மூவரையும் சுற்றி வளைத்து, அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மோகன் (22), சூர்யா (24), ரூபன் (20) என்பது தெரியவந்தது.

மற்றொரு பள்ளிக்கு அருகில் நடந்த மற்றொரு கைது நடவடிக்கையில், ஜான் (22), சதீஷ் குமார் (24) ஆகிய இருவரை போலீஸ் குழு கைது செய்தது. அவர்களிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்