ஊரப்பாக்கத்தில் புதன்கிழமை வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கி 2 வயது சிறுமி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் ஊரப்பாக்கம் ஐயஞ்சேரியை சேர்ந்த ஷாலினி என அடையாளம் காணப்பட்டுள்ளது. குழந்தையின் பெற்றோர் சத்யராஜ் மற்றும் மணிமாலா தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
புதன்கிழமை மதியம் வராந்தாவில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த போது மணிமாலா வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தார்.
மதியம் 1 மணியளவில் எழுந்த மணிமாலா, ஷாலினியை காணவில்லை, சிறிது நேரம் தேடிய பின், வீட்டின் வெளியே குடிநீர் சேமிப்பதற்காக கட்டப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் ஷாலினி மிதப்பதை கவனித்தார். உடனடியாக அவர் ஷாலினியை அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார், ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.