Friday, April 26, 2024 8:59 pm

ஊரப்பாக்கத்தில் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கி 2 வயது குழந்தை பலி

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஊரப்பாக்கத்தில் புதன்கிழமை வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கி 2 வயது சிறுமி உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் ஊரப்பாக்கம் ஐயஞ்சேரியை சேர்ந்த ஷாலினி என அடையாளம் காணப்பட்டுள்ளது. குழந்தையின் பெற்றோர் சத்யராஜ் மற்றும் மணிமாலா தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

புதன்கிழமை மதியம் வராந்தாவில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த போது மணிமாலா வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தார்.

மதியம் 1 மணியளவில் எழுந்த மணிமாலா, ஷாலினியை காணவில்லை, சிறிது நேரம் தேடிய பின், வீட்டின் வெளியே குடிநீர் சேமிப்பதற்காக கட்டப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் ஷாலினி மிதப்பதை கவனித்தார். உடனடியாக அவர் ஷாலினியை அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார், ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்