சர்வதேச விமான நிலையத்தில் குரங்கு காய்ச்சலுக்கான பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை என்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
“வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு அறிகுறிகள் உள்ளனவா என தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை குரங்கு காய்ச்சலால் பாதிப்பு இல்லை. தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செஸ் ஒலிம்பியாட் வீரர்கள் யாருக்கும் குரங்கு காய்ச்சலின் அறிகுறியே இல்லை. செஸ் ஒலிம்பியாட் வீரர்கள் அவர்களுக்கு வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டால், தனிமைப்படுத்தப்படுவார்கள், ”என்று அவர் செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.
இதனிடையே சென்னையில் குரங்கு நோய் ஆய்வகம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கிண்டி கிங் நிறுவனத்தில் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.