பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜப்பானில் நடைபெற்ற ஜி7 மாநாட்டை முடித்துக் கொண்டு, அங்கிருந்து தீவு நாடான பப்புவா நியூ கினியாக்கு சென்றுள்ளார். அங்கு பொதுவாக சூர்யோதயத்திற்குப் பின் எந்த தலைவருக்கும் சம்பிரதாய வரவேற்பு தரக்கூடாது என்று கட்டுப்பாடு இருக்கிறது. ஆனால், மோடி நேற்றிரவு அங்குச் சென்றதால் இந்த கட்டுப்பாட்டைத் தளர்த்தி சம்பிரதாய வரவேற்பு அளித்துள்ளனர்.
இந்நிலையில், அங்கு பல்வேறு நிகழ்ச்சியில் இன்று (மே 22) பங்கேற்றிய மோடி, பின் பப்புவா நியூ கினியாவில் உள்ள உள்ளூர் மொழியில் (டோக் பிசின்) திருக்குறள் நூலை வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “திருக்குறள் ஒரு தலைசிறந்த படைப்பு, இது பல்வேறு துறைகளில் மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது எனப் பெருமிதமாக ட்வீட் செய்துள்ளார்.