- Advertisement -
இத்தாலியில் உள்ள மவுண்ட் எட்னா எரிமலை தான் ஐரோப்பாவின் மிக உயரமான எரிமலையாகும். இந்த எரிமலையின் உயரம் 330 மீட்டர் ஆகும். தற்போது இன்று (மே 22) இந்த மவுண்ட் எட்னா எரிமலை வெடித்து லாவா குழம்பு வழிந்தோடுகிறது. இந்த வெடிப்பின் மூலம் வெளிப்படும் கருநிற சாம்பல் கட்டானியா விமான நிலைய ஓடு பாதை முழுவதும் சூழ்ந்து உள்ளதால்,அங்கு விமானச் சேவைகள் ரத்தாகியுள்ளன.
மேலும், அந்த எரிமலையின் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள கட்டடங்கள் சாலைகளில் அடர் சாம்பல் மற்றும் பாறைகள் துகள்கள் படர்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். அதைப்போல், அங்குள்ள சாலைகளில் ஒரே புகை மண்டலமாக உள்ளதால் எதிரே வரும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியாகின்றனர்
- Advertisement -