செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயிலில் உள்ள ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்மப் பெருமாள் கோயிலுக்கு நாகாலாந்து ஆளுநர் லா.கணேசன் சனிக்கிழமை சென்று வழிபட்டார்.
கவர்னர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கோவில் முழுவதும் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்ற கவர்னரை இந்து சமய அறநிலையத்துறையினர் வரவேற்றனர்.
இந்த பூஜையில் ஆளுநருடன் பாஜக முன்னாள் நிர்வாகி கே.டி.ராகவனும் பங்கேற்றார்.
மே 24 ஆம் தேதி தொடங்கி ஜூன் 7 ஆம் தேதி முடிவடையும் வைகாசி திருவிழாவை முன்னிட்டு லா கணேசன் கோவிலுக்கு வருகை தந்ததாக கூறப்படுகிறது.
இந்த ஆய்வின்போது, செங்கல்பட்டு இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்த் பாரதிதாசன், கோயில் செயல் அலுவலர் வெங்கடேசன், மேலாளர் தமிழ்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.