கல்வி உரிமை சட்டத்தின் படி ஏழை மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீட்டில் சேர வேலூர் மாவட்டத்தில் உள்ள லிட்டில் ஸ்டார் மெட்ரிக் பள்ளியில் சேர்க்கை பெற்ற மாணவனிடம் சீருடை, பாடநூல் ஆகியவற்றிக்கு சுமார் ரூ. 12,000 கட்டணம் செலுத்தும் படி பள்ளி தெரிவித்திருந்தது. இதையடுத்து அம்மாணவர் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். அதற்கு எந்த கட்டணமும் இல்லாமல் படிப்பை தொடர ஆட்சியர் பள்ளிக்கு உத்தரவிட்டு இருந்தார்.
இதையடுத்து, பள்ளியில் சேர்ந்த அம்மாணவருக்கு எந்த புத்தகமும் வழங்கப்படவில்லை என கூறி மாநில குழந்தை உரிமையாளரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு, பாடநூல் மற்றும் சீருடைக்கான கட்டணங்களை அரசே தான் செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை 2 வாரங்களில் பிறப்பிக்க பள்ளிக்கல்வித் துறை செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.