கற்றாழை என்பது தரிசு நிலத்தில் முளைக்கும் தாவரம் ஆகும். இந்த கற்றாழை நம் உடலுக்கு பல ஆரோக்கிய பெற , மருத்துவரீதியாக குணம் கொண்டது தான் இந்த கற்றாழை (Aloe Vera). இதன் மூலம் நம் சருமத்தை பராமரிப்பதற்காக பல வழிகளில் உபயோகிக்கிறார்கள். மேலும், இந்த ஆலுவேராவில் கால்சியம், குளோரின், சோடியம், பொட்டாசியம், மாங்கனீசு, வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, பாலிசாக்கரைடுகள் மற்றும் யூரிக் அமிலம் உள்பட பல சத்துக்கள் இருக்கின்றன.
அதுமட்டுமில்லாமல், இந்த ஆலுவேராவை தினமும் மூன்று முறை தீக்காயங்கள் மேல் தடவி வந்தால் விரைவில் குணமாகும். இந்த வெட்டு காயம், சிராய்ப்பு போன்றவற்றுக்கும் இது சிறந்த ரேமீடி ஆகும். ஆனால், நம் எடுக்கும் ஆலுவேரா அதிகமாகனால், இதில் இருக்கும் பயோ ஆக்டிவ் காம்பௌண்டுகளால் கல்லீரல்லில் பெரும் பிரச்சன்னையை ஏற்படுத்தும்.
அதைபோல், மருத்துவர்களின் முறையான ஆலோசனை பெறாமல் ஆலுவேரா சாறை குடிக்க கூடாது இல்லையானால் இதயத் துடிப்பு பிரச்சனையை சந்திக்க நேரிடும்.மேலும், இந்த கற்றாழையை சருமத்தில் பூசும் கற்றாழை ஜெல்லை நீண்ட நேரமாக வைத்தால் சருமத்தை வறட்சி ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும்.