இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு மனிதனுக்கு விரைவிலேயே நோய் வருகிறது. அதிலிலும் குறிப்பாக சர்க்கரை நோய் வயோதிக நபர்களுக்கு மட்டுமில்லாமல் இளவயதினருக்கும் சீக்கிரம் வருகிறது. அப்படி சர்க்கரை நோய்க்கு அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்யனும், நம் உடலில் உள்ள ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த வேண்டும். குறிப்பாக உடம்பில் காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அப்படி உடம்பில் காயம் ஏற்பட்டால் சீக்கிரம் சரியாகாது. அதற்காக தற்போது நாம் இயற்கை முறையில் இந்த காயங்களை சரியாக்க சில வழிமுறைகள் இருக்கிறது. பொதுவாக சர்க்கரை நோயாளிகளின் கால்களில் ஏதெனும் காயம் ஏற்பட்டால் சிலருக்கு விரலை இழக்கும் அபாயமும் நேரிடுகிறது. இதற்கு தீர்வாக ஆவாரம்பூ இலைகளை எடுத்து அதை அரைக்கவும், பின்னர் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து மிதமான சூட்டில் வதக்கி அதை சுத்தமான பஞ்சில் எடுத்து காயம் உள்ள அந்த பஞ்சை வைத்து கட்ட வேண்டும்.
மேலும், இதை தொடர்ந்து இந்த முறையை பின்பற்றி வந்தால் விரைவில் காயம் குணமாகும் என கூறிகின்றனர்.