வேப்ப விதை :
முதலில் வேப்ப விதைகளில் இருக்கும் மேல் ஓடுகளை எடுத்த பின் கிடைக்கும் பருப்புகளை அரைத்து நம் உடலில் ஏதேனும் விஷம் கடித்திருந்தால் அந்த இடத்தில் இந்த பருப்பை தடவினால் விஷம் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கும். மேலும் , இந்த வேப்ப விதையில் எடுக்கப்படும் எண்ணெய் வாத நோய்களை குணமாகவும், நரம்புத் தளர்ச்சிகளை சரியாக்கும்.
முருங்கை விதை :
இந்த முருங்கையின் முற்றிய விதையை பொடித்து பாலில் கலந்து சாப்பிட்டால் இழந்த தாதுவை திரும்ப பெறலாம் என்கின்றனர். மேலும், இதன்மூலம் நரம்புத் தளர்வு, உடல் சோர்வு, ரத்த சோகை உள்ளிட்ட பல பிரச்சனைகள் குணமாகும். இந்த பொடித்த விதையை நாம் காலை மற்றும் மலையில் தேனில் கலந்து உண்டுவந்தால் மேற்படி சொன்ன அனைத்து உடல்நல கோளாறுகளை சரியாக்கும்.
மாங்கொட்டை :
நம் உண்ணும் மாம்பழத்தில் கிடைக்கும் விதையை எடுத்து நிழலில் உலர்த்தி பொடித்து கொள்ளவும். அதை தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கடுப்பு, வயிற்றுப் புண் போன்ற வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் நீங்கும். மேலும், இது உடல் சூட்டையும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.