காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2) அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அக்டோபர் 2ம் தேதி காலை 11 மணிக்கு கூட்டம் நடத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. டெங்கு பரவலை கட்டுப்படுத்துவது மற்றும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 12ம் தேதிக்குள் கிராம சபா கூட்டத்திற்கு அறிக்கை அனுப்ப மாவட்ட கலெக்டர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், அக்டோபர் 2ம் தேதி நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர், உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளின் மேம்பாடு, கற்றல்-கற்பித்தல் போன்றவை குறித்து பள்ளி நிர்வாகக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கிராம சபைக் கூட்டத்தில் முன்வைக்க வேண்டும் என்றும், இடைநிற்றல், மாணவர் சேர்க்கை, பள்ளிக் கட்டமைப்பு, மாணவர் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்க வேண்டும். விவாதிக்கப்பட்டது.