ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களின் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு நெருப்பைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் 40க்கும் மேற்பட்ட படகுகள் முழுவதுமாக எரிந்து நாசமாகின. தீயில் மீனவர்களின் பொருட்களும் சேதமடைந்தன. இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இந்நிலையில், இந்த தீ விபத்து மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம், இந்த விபத்தை அடையாளம் தெரியாத நபர், படகுகளுக்கு தீ வைத்ததாக மீனவர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். இதையடுத்து, இந்த புகாரின் பேரில் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.