- Advertisement -
கர்நாடக மாநிலம், ஷிவமொகாவில் இண்டிகோ விமான நிறுவனம், ஷிவமொகா-பெங்களூரு இடையே, விமான போக்குவரத்தைத் தொடங்கியுள்ளது. இந்த விமான போக்குவரத்து, நவம்பர் 18ஆம் தேதி முதல் தொடங்கியது.
இந்த விமான போக்குவரத்துக்குப் பயணிகளின் வரவேற்பு அதிகமாக இருப்பதால், ஷிவமொகாவில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு விமான போக்குவரத்தை இயக்க, ‘ஸ்டார் ஏர் பஸ்’ நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, ஷிவமொகா விமான நிலையத்திலிருந்து, கோவா, ஐதராபாத், திருப்பதிக்கு, நவம்பர் 21ஆம் தேதி முதல் விமான போக்குவரத்து தொடங்குகிறது. ஏற்கெனவே டிக்கெட் முன்பதிவு தொடங்கி விட்டது.
இந்த புதிய விமான போக்குவரத்து சேவை, ஷிவமொகா மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -