உலகின் மிகப்பெரிய சதுப்புநில காடான பிரேசிலின் பாண்டனலில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ, கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து பற்றி எரிந்து வருகிறது. இந்த தீயில் இதுவரை 7.70 லட்சம் ஏக்கர் வனம் எரிந்து சாம்பலாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாண்டனல் காடு ஜாகுவார், டால்பின், ஓநாய், பூனை, ஆமை போன்ற பல வகையான விலங்குகளின் புகலிடமாக விளங்குகிறது. இந்த தீயில் வனவிலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஜாகுவார் இனம் முற்றிலும் அழிந்துவிடும் அபாயத்தில் உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
தீயை அணைக்க தீயணைப்புத் துறையினரும், விமானப்படையினரும் ஈடுபட்டுள்ளனர். ஆனால், தீயை முழுமையாக அணைக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த காட்டுத்தீக்கு வெப்பநிலை உயர்வு மற்றும் மனித நடவடிக்கைகள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.