பொதுத்துறை வங்கிகளில் 5%-10% பங்குகளை விற்க ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் & சிந்து வங்கி, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, UCO வங்கி ஆகிய 6 வங்கிகளில் தற்போது 80%-க்கும் மேல் பங்குகள் வைத்திருக்கும் ஒன்றிய அரசு. நிலையில், அதில் 5-10 சதவீதத்தை விற்பது குறித்து ஒன்றிய அரசு ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கையால், பொதுத்துறை வங்கிகளின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளில் தனியார்த் துறையின் பங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வங்கிகளின் செயல்திறன் மற்றும் லாபம் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த நடவடிக்கைக்கு எதிராக, பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பொதுத்துறை வங்கிகள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது அவசியம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
பொதுத்துறை வங்கிகளில் பங்குகளை விற்பதன் மூலம், அரசு நிதி ஆதாரத்தை ஈட்ட முடியும் என்று கூறப்படுகிறது. மேலும், பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகளை மேம்படுத்தத் தனியார்த் துறையின் பங்களிப்பு தேவை என்று அரசு கருதுகிறது.