சஹாரா குழுமத்தின் நிறுவனர் சுப்ரதா ராய் (75) மாரடைப்பால் நேற்று (நவ .14) இரவு காலமானார். இவருக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்படப் பல உடல்நல கோளாறுகளால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சுப்ரதா ராய், 1948-ம் ஆண்டு மே 2-ம் தேதி மேற்கு வங்காளத்தில் பிறந்தார். 1978-ம் ஆண்டு சஹாரா குழுமத்தை நிறுவினார். 1980-களில் இந்தியாவின் மிகப்பெரிய நிதி நிறுவனங்களில் ஒன்றாக சஹாரா குழுமம் உருவெடுத்தது.
சஹாரா குழுமம், வங்கி, காப்பீடு, ரியல் எஸ்டேட், தொலைக்காட்சி, ஊடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படுகிறது. மேலும், இதில் சுப்ரதா ராய், இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக இருந்தார். அவர், 2016-ம் ஆண்டு இந்திய அரசின் பத்ம பூஷண் விருதைப் பெற்றார்.