தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வரும் 16ம் தேதி ஒடிசா கடற்கரை நோக்கி நகரக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இந்நிலையில், நேற்று (நவ .14) 7 இடங்களில் மிகக் கனமழையும், 31 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளன. மேலும், அடுத்த 3 தினங்களுக்குத் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மிகக் கன மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியது
அதைப்போல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டைப் பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு என்றும், சென்னையில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.