சருமம் வறண்டு போகாமல் இருக்க, மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது அவசியம். இயற்கையான முறையில் வீட்டிலேயே மாய்ஸ்சரைசர் தயாரிக்கலாம். அதற்குத் தேவையான பொருட்கள்: அரை கப் தேங்காய்ப் பால், 1 ஸ்பூன் கிளிசரின், 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர், 4-5 துளி ரோஸ்மேரி எண்ணெய்
இதன் செய்முறை : ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால், கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டரை சேர்த்துக் கலக்கவும். இதில் ரோஸ்மேரி எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர் இந்த கலவையை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி, பிரிட்ஜில் வைத்து 3 மணி நேரம் ஊற வைக்கவும். 3 மணி நேரத்திற்குப் பிறகு, இந்த கலவையை எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்யவும்.
பின்னர் 15 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இந்த மாய்ஸ்சரைசர் முக சருமத்திற்கு நல்ல நிறத்தையும், கொலாஜன் உற்பத்தியையும் ஊக்குவிக்கும். ரசாயனங்கள் இல்லாததால் சருமமும் பாதிக்கப்படாது.
இந்த மாய்ஸ்சரைசரின் பல நன்மைகள் உள்ளன. அதில், சருமத்தை ஆழமாக ஈரப்பதமாக்குகிறது, சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது, சருமத்தில் உள்ள சுருக்கங்களைக் குறைக்கிறது, சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குகிறது, சருமத்தில் உள்ள அழற்சியைக் குறைக்கிறது.