ஆர்யன் என்பவர் Flipkart நிறுவனத்திலிருந்து 1 லட்சத்திற்குச் சோனி டிவி ஆர்டர் செய்தார். ஆனால் அவருக்கு தாம்சன் டிவி அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அதற்குரிய ரிமோட் உள்ளிட்ட எந்த சாதனங்களும் இல்லை. இந்த விஷயத்தை அவர் Flipkart நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளார். ஆனால் நிறுவனம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று X தளத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விஷயம் குறித்து Flipkart நிறுவனம் விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், ஆர்யன் என்பவருக்குச் சரியான டிவியை வழங்க வேண்டும் என இணையவாசிகள் இணையத்தில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மேலும், இந்த சம்பவம் Flipkart நிறுவனத்தின் மீது மக்கள் நம்பிக்கையைக் குறைக்கக்கூடும். நிறுவனம் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்