- Advertisement -
கர்நாடகாவில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி பெற்ற பிறகு, பிரசாரத்தில் கூறியபடி இனி அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டத்தை அமல்படுத்தியது கர்நாடக அரசு. ஆனால், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் போக்குவரத்து சங்கங்கள் நேற்று (செப் .11) போராட்டத்தில் ஈடுபட்டன.
இந்நிலையில், இதுகுறித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா, “பெண்களின் நலனுக்காகக் கொண்டு வந்த திட்டத்தால் தங்களுக்கு லாபம் குறைகிறது எனத் தனியார் சங்கங்கள் போராடுகிறது. அதற்கு இழப்பீடும் கேட்கிறார்கள். நடைமுறைக்குச் சாத்தியமில்லாத கோரிக்கைகளை ஏற்க முடியாது” என்றார்.
- Advertisement -