- Advertisement -
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய ரஷ்யாவின் தயாரிப்பான ‘லூனா 25’ என்ற விண்கலத்தைக் கடந்த மாதம் விண்ணில் ஏவியது. ஆனால், இந்த விண்கலம் தொழில்நுட்ப கோளாறு காரணமாகக் கடைசிக் கட்டத்தில் தரையிறங்க முடியாமல் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், நிலவின் மேற்பரப்பில் புதிதாக 10 மீட்டர் விட்டத்துக்குப் பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக நாசாவின் எல்ஆர்ஓ ஆர்பிட்டர் சற்றுமுன் கண்டறிந்துள்ளது. நிலவை ஆய்வு செய்வதற்காக ரஷ்யா அனுப்பிய ‘லூனா 25’ விண்கலத்தினால் ஏற்பட்ட பள்ளமாக இருக்க வாய்ப்புள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
- Advertisement -