- Advertisement -
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவங்கள் நடைபெற உள்ளன. இதில் சாமானியர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், இவ்விரு பிரம்மோற்சவங்களுக்கும் விஐபி தரிசனத்திற்கான சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படமாட்டாது எனத் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
அதேபோல், திருப்பதியில் வழங்கப்பட்டு வரும் வாகன சேவை, அன்னதானம், லட்டு விநியோகம் உள்ளிட்ட அனைத்திலும் சாதாரண பக்தர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் எனத் தேவஸ்தானம் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
- Advertisement -