- Advertisement -
சிறந்த கணவன் பெறச் சிவன் கோயிலில் பக்தியுடன் பிரார்த்தனை செய்யலாம். பதினாறு திங்கட்கிழமை விரதம் இருங்கள். வீட்டின் மேற்கு மற்றும் வடமேற்கு மூலையைச் சுத்தமாக வைத்திருங்கள். இந்த திசை நல்ல உறவுகளின் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. திருமணமாகாத பெண் பௌர்ணமி நாளில் சந்திரனை வழிபட நல்ல கணவர் அமைவார்.
மேலும், பெண்ணின் திருமணம் தாமதமானால் பௌர்ணமி நாளில் ஐந்து ஆரஞ்சு பழங்களைக் கையில் எடுத்துக் கொண்டு சந்திரனைப் பார்த்து நடந்து ஆறு, கால்வாய், கடல் போன்றவற்றில் போட வேண்டும். இதை ஒரு முறை தான் செய்யனும். திருமணம் வரன் பார்க்கும் பெண்ணின் படுக்கையறையில் சந்திரனின் புகைப்படத்தை மேற்கு சுவற்றில் வைக்கவும். இதனால் தகுதியும், திறமையும் வாய்ந்த மணமகன் கிடைக்க வாய்ப்பு உண்டு.
- Advertisement -