- Advertisement -
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், அவருக்கு வழங்கப்பட்ட பரிசுகளைக் கருவூலத்தில் ஒப்படைக்காமல் விற்று சொத்து சேர்த்த வழக்கில் நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதையடுத்து, இவரைச் சிறையில் அடைத்தனர். மேலும், இவர் ஊழல், மோசடி, கொலை போன்ற வழக்கிலும் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில், இந்த சிறைத் தண்டனை தீர்ப்பை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கு குறித்து இன்று விசாரணை நடைபெற்றது. அதில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்த மாவட்ட நீதிமன்ற தீர்ப்புக்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்து, சிறையிலிருந்து அவரை விடுவிக்கவும் உத்தரவு பிறப்பித்தது. இதனால், இனி விரைவில் பாகிஸ்தானில் நடக்க உள்ள பொதுத்தேர்தலில் அவர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது
- Advertisement -