- Advertisement -
பெண்கள் இரவில் விளக்கு வைத்தவுடன் அழக்கூடாது. விளக்கு வைத்த பின் வளையல்கள் கழட்டக் கூடாது. திருமணம் ஆன பெண்கள் கைகளில் வளையல் இல்லாமல் உணவு பரிமாறக் கூடாது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வீட்டை விட்டுச் சென்றால் இரவு வீடு திரும்பிட வேண்டும். பிறர் வீடுகளில் தங்கக் கூடாது. காய்கறிகளையோ, அன்னத்தையோ கைகளில் பரிமாறக்கூடாது. தலையை விரித்துப் போட்டு உட்காரக்கூடாது. தம்பதிகளைக் கூட விடாமல் தடுப்பது மகா பாவம்.
மேலும், இந்த கன்னிப் பெண்கள் சாந்துப் பொட்டை வைத்துக் கொள்ளலாம். திருமணம் ஆன பெண்கள் குங்குமப் பொட்டுக்கு உரியவர்கள். பெண்கள் பிரம்ம முகூர்த்த நேரம் காலை, மாலை எதிர்மறை வார்த்தைகள் உச்சரிக்கக் கூடாது, எப்போதும் உபயோகிக்காமல் இருப்பது மிகவும் நல்லது.
- Advertisement -