- Advertisement -
நேற்று (ஆக .23) இஸ்ரோவின் ‘சந்திரயான்-3’ விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இதற்காகப் பலரும் தங்களது வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், சந்திரயான்-3 வெற்றி பெற்றதற்குக் கூகுளின் சிஇஓ சுந்தர் பிச்சை, “நம்பமுடியாத அற்புத தருணம். இஸ்ரோவுக்கு எனது வாழ்த்துகள்” என்றார்.
மேலும், அவர் ” நிலவின் தென் துருவ பகுதியில் சாஃப்ட் லேண்டிங் செய்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது” என ட்விட் செய்தார். அதற்கு ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க், ‘சூப்பர் கூல்’ என ரிப்ளை கொடுத்துள்ளார்.
- Advertisement -