- Advertisement -
பாகிஸ்தான் நாட்டில் ஜரன்வாலா மாவட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளன. அப்பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட மதத்தின் புனித நூலை மற்றொரு தரப்பு அவமதித்தாக காவல்துறையில் புகார் எழுந்தது. இதையடுத்து, அப்பகுதியில் இருதரப்பினரும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இப்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏராளமானோர் அங்கிருந்த தேவாலயங்கள் மீது தீ வைப்பு போன்ற தாக்குதல்களை நடத்தினர்.
இந்நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களைச் சேதப்படுத்தியது தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு இருந்தனர். அதேசமயம், அங்குக் கலவரம் தொடர்வதால் அப்பகுதியில் வசிக்கும் சுமார் 500 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும், பாதுகாப்பிற்காக ஆயிரத்திற்கும் அதிகமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
- Advertisement -