- Advertisement -
அவதூறு வழக்கிலிருந்து இடைக்காலத் தடை எனத் தீர்ப்பு வந்ததையொட்டி மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினரானார் ராகுல் காந்தி. இந்நிலையில், தற்போது கேரளா மாநிலத்தில் உள்ள அவரது சொந்த தொகுதியான வயநாடு கல்பெட்டாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி எம்பி அவர்கள், ” கடந்த 4 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் என் தொகுதி மக்கள் முன் பேசிக் கொண்டிருக்கிறேன்” என்றார்.
மேலும், அவர் ” நான் இக்கட்டில் சிக்கித் தவித்த போது, வயநாடு என்னைப் பாதுகாத்து, ஆதரவளித்தது. பாஜக அரசு என்னை எத்தனை முறை பதவி நீக்கம் செய்தாலும், எனக்கும், வயநாடுக்கும் இடையே உள்ள உறவை யாராலும் பிரிக்க முடியாது” எனப் பேசினார்.
- Advertisement -