- Advertisement -
இந்தியாவில் இந்தாண்டு நடக்கவிருக்கும் 50 ஓவர் ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடருக்காக அட்டவணை வெளியாகிய நிலையில், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தைப் புதுப்பிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்த ஸ்டேடியத்தின் அறை ஒன்றில் மிகப்பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்துள்ளன. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- Advertisement -