- Advertisement -
டெல்லி நாடாளுமன்ற மக்களவையில் ஒன்றிய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், இதன் மீதான விவாதம் நேற்று முதல் (ஆக.8) தொடங்கியது. அப்போது, நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது காரசார விவாதம் நடைபெற்றது. தற்போது இன்று (ஆக .9) 2வது நாளாக மதியம் 12 மணிக்கு நம்பிக்கையில்லாத் தீர்மானம் பற்றிய விவாதத்தைக் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி பேசுவார் எனக் காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் பாஜக சார்பில் இன்றைய விவாதங்களில் ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானிஆகியோரும் பங்கேற்கின்றனர், பின்னர் ஒன்றிய உள்துறை அமைச்சர் மித்ஷாவும் பேச இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -