- Advertisement -
நாடாளுமன்ற மக்களவையில் 2வது நாளான இன்று (ஆக .9) நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய நீண்ட நாளுக்குப் பின் பேசிய ராகுல் காந்தி எம்பி அவர்கள், “இந்தியாவிலிருந்து மணிப்பூரையே பிரித்து விட்டீர்கள். பிரதமர் மோடி மணிப்பூரை நாட்டின் ஒரு பகுதியாகக் கருதாததால் தற்போது வரை அங்குச் செல்லவில்லை” என்றார்.
மேலும், அவர் ” மணிப்பூரைப் பிரதமர் கைவிட்டுவிட்டார். வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்குப் பிரதமர் ஏன் செல்லவில்லை? மணிப்பூரை ஒன்றிய அரசு இரண்டாகப் பிரித்து விட்டது. மணிப்பூரில் நடந்த கொடூரங்கள் இந்தியாவைக் கொன்றுவிட்டதற்குச் சமம்” என அடுக்கடுக்காக மோடி அரசு குறித்து குற்றஞ்சாட்டி வருகிறார்.
- Advertisement -