- Advertisement -
நாடாளுமன்ற மக்களவையில் ஒன்றிய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், இதன் மீதான விவாதத்தின் இரண்டாம் நாளான இன்று (ஆக.9) ராகுல்காந்தி எம்பி நீண்ட நாள் கழித்து உரையாற்றி வருகிறார்.
அதில், அவர் “மீண்டும் தனக்கு எம்பி பதவி வழங்கியதற்காகச் சபாநாயகருக்கு நன்றி. இன்றைய தினம் நான் அதானி பற்றிப் பேசப்போவதில்லை என்பதால் பாஜகவினர் அஞ்சத் தேவையில்லை. 10 ஆண்டுகள் பாஜகவினரால் நான் அலைக்கழிக்கப்பட்டிருக்கிறேன். மணிப்பூர் பற்றியே பேசுவேன். நான் இன்று யாரையும் அதிகம் தாக்கி பேசப்போவதில்லை, நீங்கள் நிம்மதியாக இருக்கலாம் ” என நாடாளுமன்றத்தில் பேசி வருகிறார்
- Advertisement -