- Advertisement -
மோடி என்ற பெயரைக் குறிப்பிட்டு அவதூறாகப் பேசிய ராகுல் காந்திக்கு சில மாதங்களுக்கு முன் குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத் தண்டனை தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்ததால் தற்போது மீண்டும் எம்.பி பதவியை பெற்றுள்ளதாக மக்கள் செயலகம் இவரது நீக்கத்தை ரத்து செய்ததாகத் தெரிவித்தது.
இந்நிலையில், தற்போது எம்.பி பதவியை திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, பகல் 12 மணிக்கு நாடாளுமன்றம் செல்கிறார் ராகுல்காந்தி. மேலும், ராகுல் காந்தி எம்.பி. பதவியை திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, நாளை (ஆகஸ்ட் 8) முதல் அடுத்த 3 நாட்கள் மக்களவையில் விவாதிக்கப்படவுள்ள, பிரதமர் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில், உரையாற்றவுள்ளார் எனத் தகவல் வந்துள்ளது.
- Advertisement -