கடந்த 2019ஆம் ஆண்டின் போது நடந்த கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் மோடி என்ற பெயரைக் குறிப்பிட்டு அவதூறாகப் பேசியிருந்தார். இந்நிலையில், இதைக் குறிப்பிட்டு குஜராத் நீதிமன்றத்தில் பாஜகவினர் ராகுல் காந்தி மீது சில மாதங்களுக்கு அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனால், இவர் தனது எம்.பி பதவியை இழந்தார்.
மேலும், இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி அவர்கள் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில், இந்த வழக்கு குறித்த விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை (ஆக .4) நடைபெற்றது. அப்போது, இந்த அவதூறு வழக்குக்கு ஏன் அதிகபட்ச தண்டனை அந்த நீதிமன்றம் வழங்கியதற்குச் சரியான காரணம் இல்லதாகக் கூறி இந்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்தும், இவரது தொகுதி எம்.பி பதவியை தொடருமாறும் உத்தரவிட்டனர்.
அதன்படி, தற்போது மக்களவை உறுப்பினர் பதவியைத் திரும்பப் பெற்றார் ராகுல் காந்தி. ஏனென்றால், இந்த அவதூறு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததைத் தொடர்ந்து, தகுதிநீக்கத்தை ரத்து செய்து அறிக்கை வெளியிட்டது மக்களவை செயலகம். இதனால், 136 நாட்களுக்குப் பிறகு, மீண்டும் எம்.பி., ஆனார் ராகுல் காந்தி