- Advertisement -
மோடி என்ற பெயரைக் குறித்து 2019ல் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியதாக சில மாதங்களுக்கு முன் குஜராத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி அவதூறு வழக்கு தொடரப்பட்டது. அப்போது, இந்த வழக்கு குறித்து விசாரித்த குஜராத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தால், இவரது எம்.பி பதிவியும் ராஜினாமா செய்தார். அதேசமயம், இந்த தண்டனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் மேல்முறையீடு தொடர்ந்தார்.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 4) நாடே எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை முழுமையாக விசாரித்த நீதிபதி இந்த 2 ஆண்டுக்கால சிறைத்தண்டனைக்கு நிறுத்தி வைத்து தீர்ப்பு வழங்கினார். மேலும், இந்த வழக்கு குறித்து நீதிபதிகள், ” இந்த அவதூறு வழக்கில் 2 ஆண்டுகளுக்குப் பதிலாக 1 நாள் குறைவாகத் தண்டனை வழங்கியிருந்தால்கூட எம்.பி. பதவியை ராகுல் காந்தி இழந்திருக்க மாட்டார். அதிகபட்ச தண்டனை ஏன் வழங்கப்பட்டது என்ற காரணத்தை கீழமை நீதிமன்றம் கூறவே இல்லை. இந்த தீர்ப்பால், ராகுல் காந்தி என்ற தனி நபர் மட்டுமில்லாமல், பிரதிநிதி இல்லாமல் அவரை தேர்ந்தெடுத்த தொகுதி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்
- Advertisement -