- Advertisement -
கடந்த 2019ஆம் ஆண்டில் கர்நாடக தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியதாக சில மாதங்களுக்குக் குஜராத் நீதிமன்றத்தில் பாஜகவினர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு குறித்து விசாரித்த நீதிமன்றம் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுக்கால சிறைத்தண்டனை வழங்கியது. மேலும், இந்த தண்டனையால் இவரது எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தண்டனைக்குத் தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு தொடர்ந்தார்.
அதன்படி, இந்த அவதூறு வழக்கில், ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, இன்று(மே. 04) உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கின் விசாரணையில், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனை இடைக்காலத் தடை விதிப்பதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ”வெறுப்புக்கு எதிரான அன்பின் வெற்றி இது” என ட்வீட் செய்துள்ளார். அதேசமயம், அவதூறு வழக்குத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால் மீண்டும் நாடாளுமன்றம் செல்கிறார் ராகுல் காந்தி
- Advertisement -