முருங்கை மரத்தின் வேர் முதல் இலை வரை அத்தனையும் மருத்துவக் குணம் கொண்டது. முருங்கைக்குப் பூக்களைச் சிலர் அலட்சியமாக நினைக்கிறார்கள். சர்க்கரை நோய் உள்ளவர்கள் முருங்கைப் பூவை அடிக்கடி சமைத்துச் சாப்பிடலாம். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக உதிரப்போக்கைக் கட்டுப்படுத்தும். குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும். கண்களில் உள்ள கோளாறுகளைச் சரிசெய்யக் கூடியது.
மேலும், இந்த முருங்கைப்பூ பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் பார்வை திறன் அதிகரிக்கும். தினசரி முருங்கை பூக்களைச் சாப்பிடுவதால், விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இப்படி முருங்கை பூக்களுடன்,பால், பாதாம் பொடி சேர்த்துக் காய்ச்சி குடித்து வந்தால் உடல் பலம் பெறும்.
- Advertisement -