மணிப்பூரில் கடந்த 2 மாதமாக நடந்து வரும் வன்முறை குறித்து பிரதமர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என எதிர்க்கட்சிகள் பலர் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், நேற்று இணையத்தில் மணிப்பூர் குக்கி இனத்தைச் சேர்ந்த 2 பெண்களுக்கு நடந்த கொடூர சம்பவத்தை அடுத்து மோடி இன்று மெளனம் கலைத்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி அவர்கள், “ மணிப்பூரில் பெண்கள் அவமதிக்கப்பட்ட சம்பவம், இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களையும் அவமானத்தில் ஆழ்த்தியுள்ளது. மணிப்பூரின் மகள்களுக்கு ஏற்பட்டதை மன்னிக்கவே முடியாது. எந்த குற்றவாளிகளும் தப்பமாட்டார்கள் என நாட்டு மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்” என ஆவேசமாகக் கூறியுள்ளார்.
- Advertisement -