முதலில் கோயிலில் விநாயகரை வணங்கி அதன் பிறகே மூலவர் தரிசனம் செய்ய வேண்டும். பின்னர் பிரகாரங்களில் வலம் வரும்போது , கோபுரத்தின் நிழலோ அல்லது கொடிமரத்து நிழலோ குறுக்கிட்டால், அதை மிதிக்காமல் வலம் வர வேண்டும். முடியவில்லை என்றால், அடுத்த பிராகாரத்தை வலம் வரலாம். அதைப்போல், இந்த ஸ்வாமி உற்சவம் நடக்கும்போது, ஸ்வாமியின் பின்னால் நாம் வரும் காலத்தில் மேலே சொன்ன நிழல்கள் இருந்தாலும் குற்றமில்லை.
மேலும், எந்தக் கோயில் ஆனாலும் சரி ஸ்வாமிக்கும் அவருக்கு எதிரில் உள்ள வாகனத்துக்கும் நடுவில் போகக் கூடாது. அதைப்போல், கோயிலில் தரப்படும் விபூதி, குங்குமம் முதலான பிரசாதங்களை இடக்கைக்கு மாற்றக் கூடாது. ஒரு காகிதத்தில் போட்டு மடித்து வைத்துக் கொள்ளலாம்.
- Advertisement -