மத்தியப் பிரதேசத்தில் உள்ள போபாலில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி அவர்கள், “எதிர்க்கட்சிகளின் வாரிசு அரசியல் நாட்டுக்கு உதந்ததல்ல. நாட்டு நலனுக்காகவும், சந்ததிகள் முன்னேற்றத்திற்கும் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்” என வருகின்ற தேர்தல் முன்னிட்டு பேசியுள்ளார்.
மேலும், அவர் ” திமுகவுக்கு வாக்களித்தால் கருணாநிதியின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மட்டுமே பலனடைவார்கள், காங்கிரசுக்கு வாக்களித்தால் காந்தி குடும்பம் மட்டுமே பலனடையும்” என்று நேரடியாக திமுக, காங்கிரஸ் கட்சியை வம்பிழுத்து பேசி வருகிறார்
- Advertisement -