நம் தலையில் ஏற்படும் வறட்சி, தலை குளித்துவிட்டுத் துவட்டாமல் போவது, தலையில் சோப்புத் தண்ணீர், ஷாம்பூ தங்கிவிடுவதால் உண்டாகும் அழுக்கு, அதிக எண்ணெய்ப் பசையுடன் இருத்தல், வியர்வை, நுண்ணுயிர்க் கிருமிகள், தோல் நோய்கள் போன்ற பல காரணங்களால் பொடுகு வருகிறது. மேலும், மனஅழுத்தம், கவலையாலும் வரலாம். பொடுகு, பாக்டீரியாவால் ஏற்படுகிறது. முடியைச் சுற்றி பாக்டீரியா அரிப்பதால், தலையின் மேற்பரப்புத் தோலில் இறந்துபோன உயிரணுக்கள், செதில் செதிலாகத் தோன்றி அரிப்பை ஏற்படுத்தும். இந்தப் பொடுகு இருந்தாலே, பேன், ஈறுகள் வந்து தலையில் குடியிருக்கும்.
தினமும் தலைக்கு எண்ணெய் தடவி வாரி வந்தாலே, பேன் தலையில் நிற்காமல் வந்துவிடும். அதைப்போல், ஒரு கப் மரிக்கொழுந்துடன், அரை கப் வெந்தயக்கீரையை அரைத்து, பேக் போலத் தலைக்குப் போட்டுக்கொண்டு, 10 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் நன்கு அலசினால், பேன், பொடுகு நீங்கி தலை சுத்தமாகிவிடும் என்கின்றனர்
- Advertisement -