மத்தியப் பிரதேச மாநிலம் செஹோர் பகுதியில் உள்ள முங்கவலி கிராமத்தில் இருக்கும் வயலில் தோண்டப்பட்ட 300 அடி ஆழ்துளைக் கிணற்றில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) பகல் 1 மணியளவில் சிரிஸ்தி என்ற இரண்டரை வயது பெண் குழந்தை தவறி விழுந்தது. இதையறிந்த இந்த குழந்தையின் பெற்றோர்கள் மீட்புக் குழுவுக்குத் தகவல் அளித்தனர்.
இந்நிலையில், இந்த குழந்தையைக் காப்பாற்ற மீட்புக் குழுவினர் 55 மணி நேரம் போராட்டத்திற்குப் பின் குழந்தை மயக்க நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- Advertisement -