தினசரி விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால் இந்த ராகு – கேது தோஷம் விலகும். மேலும், இந்த சங்கடஹர சதுர்த்தி அன்று அருகம்புல் மாலையை விநாயகருக்குச் சாற்றி வழிபட்டு வந்தால் தோஷம் அகலும். அதிலும், இந்த ராகு தோஷம் உடையவர்கள் தூங்கும்போது தலையணை அடியில் அருகம்புல் வைத்தும், கேது தோஷம் உடையவர்கள் தர்ப்பைப் புல்லையும் தலையணை அடியில் வைத்துப் படுத்து உறங்கினால் தோஷங்கள் அகலும்.
இது தொடர்ந்து 9 வாரம் செய்யவும். அதன்பிறகு அந்த புல்லைக் கடலில் விட்டு விடலாம். பின்னர், உங்கள் வீட்டில் விளக்கேற்றி ராகு, கேதுவின் காயத்ரி மந்திரங்களைச் சொல்லி வந்தால் இந்த தோஷங்கள் விலகும்.
- Advertisement -